ADDED : அக் 04, 2011 09:53 PM
குஜிலியம்பாறை:கோவிலூர் ராமநாதபுரம் உண்டு உறைவிட பள்ளியில், காந்தி
ஜெயந்தி விழா நடந்தது.சிறப்பு கல்வி திட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர்
செல்வராஜ்பாண்டியன் தலைமை வகித்தார்.
ஆசிரிய பயிற்றுனர் பூங்கோதை முன்னிலை
வகித்தார். பூஜா பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாகி முருகேஸ்வரி
வரவேற்றார். காந்திய கொள்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. ஊர் பிரமுகர்
நந்தகோபால் பரிசுகள் வழங்கினார். சிறப்பு ஆசிரியர்கள் நந்தினி, கோகிலா,
அறக்கட்டளை மேலாளர் மகேந்திரன் பங்கேற்றனர்.


