/உள்ளூர் செய்திகள்/மதுரை/பொதும்பு பள்ளி மாணவிகளிடம் பிருந்தா காரத் ஆறுதல்பொதும்பு பள்ளி மாணவிகளிடம் பிருந்தா காரத் ஆறுதல்
பொதும்பு பள்ளி மாணவிகளிடம் பிருந்தா காரத் ஆறுதல்
பொதும்பு பள்ளி மாணவிகளிடம் பிருந்தா காரத் ஆறுதல்
பொதும்பு பள்ளி மாணவிகளிடம் பிருந்தா காரத் ஆறுதல்
ADDED : ஆக 28, 2011 12:38 AM
மதுரை : மதுரை மாவட்டம் பொதும்பு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமியின் பாலியல் கொடுமை குறித்து மாணவிகளிடம் மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.பி., பிருந்தாகாரத் விசாரித்து, ஆறுதல் கூறினார்.
பொதும்பு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி. இவர் மாணவிகளிடம் தவறாக நடப்பதாக புகார் எழுந்தது. ஆறாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக தலைமையாசிரியர், உடந்தையாக இருந்ததாக ஆசிரியர்கள் சண்முகம், அமலிரோஸி மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமை ஆசிரியர் கைதாகவில்லை. ஐகோர்ட் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் மரியகுளோரி விசாரித்து வருகிறார். அவர், மாணவிகள், பெற்றோரை மிரட்டி, ஆசிரியருக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கியதாக கிராமத்தினர் கூறுகின்றனர். மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.பி., பிருந்தாகாரத், நேற்று பொதும்பு சென்றார். மாணவிகள், பெற்றோர்களை விசாரித்து, ஆறுதல் கூறினார். போலீஸ் மிரட்டல் குறித்து பெற்றோர் புகார் தெரிவித்தனர். பிருந்தா காரத், ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனனிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டார். பின், டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், அவரை சந்தித்து பேசினார். மரியகுளோரிக்கு பதிலாக ஐகோர்ட் அனுமதி பெற்று சூரியகலாவை விசாரணை அதிகாரியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. பிருந்தாகாரத் கூறுகையில், '' வழக்கு பதிவாகி, 45 நாள் ஆகியும் நடவடிக்கை இல்லை. குற்றவாளிகளுக்கு அதிகாரிகள் துணை போனது, தி.மு.க., ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணம். அ.தி.மு.க., ஆட்சியில் அது தொடரக்கூடாது. நேர்மையான அதிகாரிகளை நியமித்து, மாணவிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும்,'' என்றார்.


