Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மட்டக்கண்டி அரசு பள்ளிக்கு புதிய பாதை கிடைத்ததால் மகிழ்ச்சி

மட்டக்கண்டி அரசு பள்ளிக்கு புதிய பாதை கிடைத்ததால் மகிழ்ச்சி

மட்டக்கண்டி அரசு பள்ளிக்கு புதிய பாதை கிடைத்ததால் மகிழ்ச்சி

மட்டக்கண்டி அரசு பள்ளிக்கு புதிய பாதை கிடைத்ததால் மகிழ்ச்சி

ADDED : அக் 07, 2011 12:47 AM


Google News
மஞ்சூர் : கடந்த 60 ஆண்டுக்கு பின் மட்டக்கண்டி அரசு ஆரம்ப பள்ளிக்கு செல்லும் நடைபாதை சீரமைக்கப்பட்டதால் பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மஞ்சூர் அருகே உள்ள மட்டக்கண்டி அரசு ஆரம்ப பள்ளிக்கு, ஓணிகண்டி, அண்ணாநகர், காமராஜ் நகர், கொட்ரக்கண்டி, தூனேரி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பால்வாடி குழந்­தை மற்றும் பள்ளி மாணவர்கள் வருகின்றனர். தூனேரி கிராமத்திலிருந்து மட்டக்கண்டி ஆரம்ப பள்ளிக்கு செல்லும் நடைபாதை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாததால் முட்புதர்கள் சூழ்ந்து விஷ ஜந்துக்களின் நடமாட்டம் காணப்பட்டது. பள்ளி குழந்தைகளும் மிகுந்த அச்சத்துடன் சென்று வந்தனர். அவ்வப்போது கிராம மக்களே நிதி திரட்டி தங்களது சொந்த பணத்தில் நடைபாதையில் சூழ்ந்துள்ள முட்புதர்களை அகற்றி வந்தனர். இந்நிலையில், கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூனேரி கிராமத்திலிருந்து மட்டக்கண்டி கிராமம் வரை நடைபாதை சீரமைக்கப்பட்டதால் பள்ளி குழந்தைகளும், கிராம மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us