/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை நகரில் குற்றங்களின் எண்ணிக்கை "ஈ-பீட்' முறையை செயல்படுத்தினால்... குறையும்சென்னை நகரில் குற்றங்களின் எண்ணிக்கை "ஈ-பீட்' முறையை செயல்படுத்தினால்... குறையும்
சென்னை நகரில் குற்றங்களின் எண்ணிக்கை "ஈ-பீட்' முறையை செயல்படுத்தினால்... குறையும்
சென்னை நகரில் குற்றங்களின் எண்ணிக்கை "ஈ-பீட்' முறையை செயல்படுத்தினால்... குறையும்
சென்னை நகரில் குற்றங்களின் எண்ணிக்கை "ஈ-பீட்' முறையை செயல்படுத்தினால்... குறையும்
சென்னை : சென்னை நகரில், போலீசாரின் இரவு நேர ரோந்தை கண்காணிக்க கொண்டு வரப்பட்ட, 'ஈ-பீட்' முறை, பல ஸ்டேஷன்களில் நடைமுறையில் இல்லை.
அண்ணாநகரில் 'ஓகே' : அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில், மொத்தம், 48 இடங்களில், 'பா-டிராக்' கருவிக்கான பிளேட்டை பதித்தனர். தற்போது, 39 இடங்களில் பிளேட் சேதம் இல்லாமல் இயங்குகிறது. மேலும் சூளைமேடு, வடக்கு கடற்கரை மற்றும் ஒரு சில போலீஸ் ஸ்டேஷன்களிலும் ஓரளவு இயங்குகிறது. பா-டிராக் கருவி செயல்பாடு குறித்து அண்ணாநகர் உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ''இக்கருவியை அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் திறம்பட கையாண்டு வருகிறோம். ஒன்றிரண்டு இடத்தில் மட்டுமே கட்டுமானப் பணிக்காக, அந்த இடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, புரோகிராம் செய்யப்பட்ட, 'பிளேட்' கள் காணாமல் போய் விட்டன. ''ரோந்து செல்லும் போலீசாருக்கு இந்த பா-டிராக் கருவியுடன், மொபைல் போன் மற்றும் வாக்கி டாக்கியும் வழங்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவம் நடந்தால், அதை தடுத்து நிறுத்தி உடனுக்குடன் மொபைல் மூலமாகவும், வாக்கி டாக்கி மூலமாகவும் தொடர்பு கொண்டு தெரிவிப்பர்,'' என்றார்.


