ADDED : செப் 25, 2011 01:44 PM
மதுரை: உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட மனு செய்தவர்கள், சீட் மறுக்கப்பட்டவர்கள், பறிக்கப்பட்டவர்கள் , திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இதில் மதுரையில் வார்டுகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்த சிலருக்கு சீட் மறுக்கப்பட்டதாகவும், சிலருக்கு சீட் கொடுக்கப்பட்டு பின்னர் பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் சிலர் மதுரை கே.கே.நகர் ,எம்.ஜி.ஆர்.சிலை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.


