/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விசைத்தறி தொழிலாளர் போராட்டம் நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கைவிசைத்தறி தொழிலாளர் போராட்டம் நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை
விசைத்தறி தொழிலாளர் போராட்டம் நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை
விசைத்தறி தொழிலாளர் போராட்டம் நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை
விசைத்தறி தொழிலாளர் போராட்டம் நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை
ADDED : செப் 07, 2011 12:40 AM
திருப்பூர் : 'விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுத்தர, தமிழக
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, இந்திய தேசிய கிராமத் தொழிலாளர்
சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய தேசிய கிராமத்தொழிலாளர்
சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம், மாவட்ட சங்க அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்
நடராஜ், ராமமூர்த்தி, துணை தலைவர் அப்துல் அஜீஸ், பொருளாளர் கருப்புசாமி
உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'பல்லடம், அவிநாசி, தெக்கலூர், திருப்பூர்,
சோமனூர், வாகராயம்பாளையம், சாமளாபுரம், மங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள ஒரு
லட்சம் விசைத்தறி தொழிலாளர்களுக்கான மூன்றாண்டு கால ஒப்பந்தம்
முடிவடைந்ததையொட்டி, கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். தமிழக அரசு
உடனே தலையிட்டு விசைத்தறி தொழிலாளர்களுக்கு நூறு சதவீதம் கூலி உயர்வு
பெற்றுத்தர வேண்டும்.'கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கும்
நலத்திட்ட உதவித்தொகையை உயர்த்தவும், தொய்வில்லாமல் நலத்திட்ட உதவிகள்
வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.


