ADDED : அக் 13, 2011 01:39 AM
மதுரை : ஊழலுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்
நோக்கத்தில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி முதற்கட்ட யாத்திரையை பீகாரில்
துவக்கி, 38 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.
இரண்டாவது கட்ட யாத்திரையை
மதுரையிலிருந்து துவங்கி திருவனந்தபுரம் வரை செல்லவுள்ளார். இதற்காக
மதுரைக்கு அக்., 27ல் மாலை அத்வானி வருகிறார். வடக்கு- மேல மாசி வீதியில்
இரவு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மறுநாள் காலை புறப்பட்டு,
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், புளியங்குடி, கடையநல்லூர் வழியாக
திருவனந்தபுரம் செல்கிறார். இதுகுறித்து பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நேற்று நடந்தது. மாநில பொது செயலாளர்கள் மோகன்ராஜூலு, சரவணபெருமாள், மாநில
செயலாளர் சுரேந்திரன், நகர் தலைவர் ராஜரத்தினம், நிர்வாகிகள் சசிராமன்,
வரவேற்பது குறித்து ஆலோசித்தனர்.


