/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் மாவட்டத்தில் 1,566 பதவிக்கு 5,383 பேர் போட்டிகரூர் மாவட்டத்தில் 1,566 பதவிக்கு 5,383 பேர் போட்டி
கரூர் மாவட்டத்தில் 1,566 பதவிக்கு 5,383 பேர் போட்டி
கரூர் மாவட்டத்தில் 1,566 பதவிக்கு 5,383 பேர் போட்டி
கரூர் மாவட்டத்தில் 1,566 பதவிக்கு 5,383 பேர் போட்டி
ADDED : அக் 05, 2011 01:08 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சி தலைவர் பதவி உள்பட 1,566
பதவிகளுக்கு 5,383 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர்.கரூர் மாவட்டத்தில் உள்ள
குளித்தலை நகராட்சியில் ஆறு பேரும், கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு 14
பேரும், 72 நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 370 பேரும், 12 மாவட்ட கவுன்சிலர்
பதவிக்கு 73 பேரும், எட்டு பஞ்சாயத்து யூனியனில் உள்ள 115 கவுன்சிலர்
பதவிக்கு 469 பேரும், 153 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 620 பேரும்,
1,042 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3,223 பேரும், 11
டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 64 பேரும், 159 டவுன் பஞ்சாயத்து
கவுன்சிலர் பதவிகளுக்கு 544 பேர் உள்பட 5,383 பேர் களத்தில் உள்ளனர்.கரூர்
மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,941 பதவிகளில், போட்டியின்றி
375 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 1,566 பதவிகளுக்கு வரும் 17
மற்றும் 19 ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.


