Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/அக்டோபருக்குள் புதிய வழிகாட்டி மதிப்பை இறுதி செய்ய உத்தரவு

அக்டோபருக்குள் புதிய வழிகாட்டி மதிப்பை இறுதி செய்ய உத்தரவு

அக்டோபருக்குள் புதிய வழிகாட்டி மதிப்பை இறுதி செய்ய உத்தரவு

அக்டோபருக்குள் புதிய வழிகாட்டி மதிப்பை இறுதி செய்ய உத்தரவு

ADDED : செப் 06, 2011 01:37 AM


Google News

மதுரை : தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணத்தை அதிகரிக்க, புதிய வழிகாட்டி மதிப்புகளை தயார் செய்வதற்கான பணிகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு முன், இடமதிப்பிற்கேற்ப பத்திரப்பதிவு கட்டணம் நிர்ணியக்கப்பட்டது. பின், 2007 ஆகஸ்ட் 1ல் புதிய வழிகாட்டி மதிப்பை வெளியிட்ட அரசு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் நிர்ணயிக்கலாம் என உத்தரவிட்டது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் நிலம், கட்டடங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. ஆனால் வழிகாட்டி மதிப்பின்படி, குறைவான கட்டணம் செலுத்தி, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தினர்.



தற்போது புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் ஆய்வு நடக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் அதிகாரிகள் சென்று குடியிருப்பு, வணிகரீதியானது என தரம்பிரித்து சதுர அடி எவ்வளவு விற்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். இதில் அதிகபட்ச தொகையைதான் வழிகாட்டி மதிப்பாக நிர்ணயிக்க உள்ளனர். இது குறித்த அறிக்கையை அடுத்த மாதத்திற்குள் சமர்ப்பிக்க பத்திரப்பதிவு துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து, அடுத்தாண்டு ஜனவரி முதல் புதிய வழிகாட்டி மதிப்பு அமலாக வாய்ப்பு உள்ளது. இம்மதிப்பு எத்தனை ஆண்டுகளுக்கு பொருந்தும் என்பது அரசு உத்தரவில் தெரியவரும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us