Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ஊழல் பட்டியலில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெயர் இருக்காது:புதுகையில் தா.பாண்டியன் உறுதி

ஊழல் பட்டியலில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெயர் இருக்காது:புதுகையில் தா.பாண்டியன் உறுதி

ஊழல் பட்டியலில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெயர் இருக்காது:புதுகையில் தா.பாண்டியன் உறுதி

ஊழல் பட்டியலில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெயர் இருக்காது:புதுகையில் தா.பாண்டியன் உறுதி

ADDED : அக் 12, 2011 02:34 AM


Google News
புதுக்கோட்டை: ''ஊழல் பட்டியலில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெயர் இருக்காது,'' என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உறுதிபட தெரிவித்தார். புதுக்கோட்டை நகராட்சியில் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திலகர்திடல் பகுதியில் அவர் பேசியதாவது:

புதுக்கோட்டை நகராட்சியில் கடந்த ஐந்து ஆண்டாக ஊழல் தலைவிரித்தாடியதை நகர்ப்பகுதி மக்கள் நன்கு அறிவர். நகரின் தற்போதைய அவல நிலை இதற்கு சாட்சியாக உள்ளது. நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 8.50 கோடி ரூபாயை திட்டப் பணிகளுக்கு குறிப்பாக சாலைப் பணிகளுக்கு செலவிடாமல் திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணத்தையும் மக்கள் நன்கு அறிவர். 'எதிர்பார்த்த கமிஷன் தொகை கிடைக்கவில்லை' என்ற ஒரே காரணத்துக்காகத்தான் சாலைகளை செப்பனிட மனமின்றி அந்த தொகை திருப்பி அனுப்பப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு உங்களை சந்திக்க வலம் வந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை வாக்காளர்கள் அனைவரும் உணர வேண்டும். நகராட்சியில் லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகளை எதிர்த்து போராடியவர் தான், தற்போது நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சண்முகா பழனியப்பன். உள்ளாட்சி அமைப்புகளில் ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் அமைய வேண்டும், அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்படவேண்டும் என நீங்கள் விரும்பினால் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்.தமிழக அரசியலில் ஊழல் மற்றும் லஞ்ச வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது. அதில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரது பெயரும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன். எனவே, நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் ஊழலை விரும்பாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை நீங்கள் ஆதரிக்கவேண்டும். இவ்வாறு தா.பாண்டியன் பேசினார். பிரச்சாரத்தின் போது, எம்.எல்.ஏ., முத்துக்குமரன், மாநிலக்குழு உறுப்பினர் ராஜசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிங்கமுத்து, சோமையா, நகரச் செயலாளர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us