Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மன்னார் வளைகுடாவில் புதிய கடல்வாழ் உயிரினம் கண்டுபிடிப்பு

மன்னார் வளைகுடாவில் புதிய கடல்வாழ் உயிரினம் கண்டுபிடிப்பு

மன்னார் வளைகுடாவில் புதிய கடல்வாழ் உயிரினம் கண்டுபிடிப்பு

மன்னார் வளைகுடாவில் புதிய கடல்வாழ் உயிரினம் கண்டுபிடிப்பு

ADDED : செப் 30, 2011 02:17 AM


Google News

தூத்துக்குடி : மன்னார் வளைகுடாவில் தூத்துக்குடி கடற்பகுதியிலிருந்து புதிய ககை பழுப்பு தாள் அதாவது ஓடுடைய பேய்க்கணவாய் என்ற புதிய கடல்வாழ் உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தினுள் செயல்பட்டுவரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஒர் அங்கமான மீன் வள ஆராய்ச்சி மற்ம் விரிவாக்க யக்கமானத புழுப்புதாள் யா னைக்கை என்ற ஓடுடைய பேய்க்கணவாயை (அதாவது ஒருவகையான ஆக்டோபஸ்) தூத்துக்குடி கடற்பகுதியிலிருந்து சேகரித்துள்ளனர். இவ்வுயிரினத்தை தூத்தக்குடி கடற்பகுதியில் உள்ள துடுப்புடைய மற்றும் ஓடுடைய மீன்களின் உயிரினப் பல்வகைமை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த பொழுது முதுநிலை ஆராய்ச்சியாளர் வைத்தீஸ்வரன் இப்புதிய மெல்லுடலியை,தூத்துக்குடி கடற்பகுதியில் 300 முதல் 310 மீட்டர் ஆழத்தில் இருந்து சேகரித்துள்ளார். இவ்வுயிரினத்தின் புற அமைப்புமற்றும் ஓடு அமைப்பின் அடிப்படையில் இவ்வுயிரினமாவது ஆர்கோனாடா ஹையன்ஸ் என்ற ஓடுடைய பேய்க்கணவாய் சிற்றினத்தை சார்ந்தது என்று உதவிப்பேராசிரியர் ஜெயக்குமார் இனம் கண்டறிந்தார்.



இந்தியாவைப் பொறுத்தவரை இவ்வுயிரினமானது தற்பொழுதுதான் முதன்முதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வுயிரினம் மெல்லுடலிகள் தொகுப்பின் கீழ் வரும் தலைக்காலிகள் வகுப்பைச் சார்ந்தது. சேகரிக்கப்பட்ட உயிரினமாது.15.4 செ.மீட்டர் நிளமும் 15 கிராம் எடையும் கொண்டிருந்தது. உலக அள வில் இதுவரை நான்கு ஓடுடைய பேய்கணவாய் இனமானது. வெப்பமற்றும் மித வெ ப்ப மண்டலப்பகுதியில் இரு ந்த பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.இவ்வுயிரினத்தின் ஓடானத யானை க்கை என்றழைக்கப்படும் நா ட்டிலஸ் இனத்தின் ஓட்டைப்போல் தோற்றமளித்தாலும், இவை ஓடுடைய பேய்கணவ õய் வகையை சார்ந்தது.

இதன் ஓடானது காகித்தாளைப்போ ன்று மெல்லியதாகவும், பழுப்புநிறத்தடன், பழுப்புதாள் யா னைக்கை என அழைக்கப்படுகிறது. இவைகள் ஓடுடைய கணுக்காலிகள், தலைக்காலிகள் மற்றும் மீன்களை உண்டு வாழ்பவை, இவைகள் சொரிமீன் உயிரினங்களை ஒட்டி வாழ்கிறது. பெண் இனத்திற் கு மட்டுமே ஓடு உள்ளது. மே லும் ஓடு போன்ற முட்டை உறைகளைக் கொண்டு முட்டைகளை உள்ளடக்கியுள் ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us