Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/நியாயமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் அட்வைஸ்

நியாயமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் அட்வைஸ்

நியாயமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் அட்வைஸ்

நியாயமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் அட்வைஸ்

ADDED : செப் 28, 2011 11:36 PM


Google News

ஓசூர் : ''தேர்தல் அலுவலர்கள் விருப்பு, வெறுப்பு இல்லாமல் நியாயமாக செயல்பட வேண்டும், '' என கலெக்டர் மகேஷ்வரன் தெரிவித்தார்.

ஓசூரில் ஒன்றிய பகுதியில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் அதிகாரிகள், ஓட்டுச்சாவடியில் பணியும் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. கலெக்டர் மகேஷ்வரன் தலைமை வகித்து பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். சப்-கலெக்டர் சந்தீப் தந்தூரி முன்னிலை வகித்தார். பயிற்சி வகுப்பில் தேர்தல் அதிகாரிகள், ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஓட்டுப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தும் முறை, நடைமுறைகள் குறித்து எடுத்து கூறி செயல்முறைபயிற்சி அளித்தனர். அதன்பின் கலெக்டர் மகேஷ்வரன் பேசியதாவது: உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்த தேர்தல் அலுவலர்களுக்கு பொறுப்பு உள்ளது. ஓட்டுச்சாவடிகளிலும், தேர்தல் நடைமுறைகளிலும் தேர்தல் அதிகாரிகள், அலுவலர்கள் விருப்பு, வெறுப்பு இல்லாமல் நியாயமாக தேர்தல் பணியாற்ற வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள், ஓட்டுச்சாவடிகளில் அத்துமீறும் கட்சியினர் மீது தேர்தல் அலுவலர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும். யாருக்கும் ஆதரவாக தேர்தல் அலுவலர்கள் செயல்பட கூடாது. இவ்வாறு அவர் பேசினார். தாசில்தார் லட்சுமி நாராயணன், வருவாய் ஆய்வாளர் செந்தில் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us