சஞ்சீவ் பட்டிற்கு ஜாமின் கிடைக்குமா? :மத்திய அரசும் பாதுகாப்பு தருகிறது
சஞ்சீவ் பட்டிற்கு ஜாமின் கிடைக்குமா? :மத்திய அரசும் பாதுகாப்பு தருகிறது
சஞ்சீவ் பட்டிற்கு ஜாமின் கிடைக்குமா? :மத்திய அரசும் பாதுகாப்பு தருகிறது

ஆமதாபாத் : குஜராத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட்டின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு, வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சஞ்சீவ் பட் ஜாமின் மனுவை நீதிபதி ஜி.என்.பாட்டீல் விசாரித்தார். 'சஞ்சீவ் பட் ஜாமின் மனுவை மறுபரிசீலனை செய்யக்கோரும் அரசின் நடவடிக்கை சரியானதல்ல. இது, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது' என, சஞ்சீவ் பட்டின் வழக்கறிஞர் வாதாடினார். அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, இம்மனு மீதான தீர்ப்பை, 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். சஞ்சீவ் பட்டை போலீஸ் காவலில் வைத்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும், என அவரது மனைவி உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து சஞ்சீவ் பட்டுக்கு சிறையில் போதிய பாதுகாப்பு அளிக்கும் படி குஜராத் அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது. அதுமட்டுமல்லாது சஞ்சீவ் பட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து ஆராயவும் உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


