/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சிறுமியை கொலை செய்த காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது விரைவு கோர்ட்சிறுமியை கொலை செய்த காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது விரைவு கோர்ட்
சிறுமியை கொலை செய்த காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது விரைவு கோர்ட்
சிறுமியை கொலை செய்த காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது விரைவு கோர்ட்
சிறுமியை கொலை செய்த காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது விரைவு கோர்ட்
பூந்தமல்லி : வாய்பேச முடியாத சிறுமியைக் கடத்தி, பாலியல் சில்மிஷம் மற்றும் கொலை செய்த காமக் கொடூரனுக்கு, ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, பூந்தமல்லி விரைவு கோர்ட் பரபரப்பான தீர்ப்பளித்தது.கொரட்டூர், மாதனங்குப்பம், சேதுபாஸ்கர நகரில் குழந்தைகள் காப்பகம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரட்டூர் ஏரிக்கரையில், உடல் சிதைந்த நிலையில் சிறுமியின் பிணம் கிடப்பதாக, போலீசுக்கு தகவல் வந்தது. சிறுமியின் அங்க அடையாளம் சரிபார்க்கப்பட்டதில், இறந்தது கவுரி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.கொரட்டூர் போலீசார் கொலை வழக்கு பதிந்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். சந்தேகத்தின்பேரில் ஜெயராமனை பிடித்து விசாரித்ததில், முன்விரோதம் காரணமாக, எத்திராஜின் மகள் கவுரியை கடத்தி, பாலியல் சில்மிஷம் செய்து, கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.இக்கொலை வழக்கு, பூந்தமல்லி முதல் விரைவு கோர்ட்டில், விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீனதயாளன், சிறுமியைக் கடத்தி, பாலியல் சில்மிஷம்; கழுத்தை நெரித்துக் கொலை செய்த ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத் தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த வழக்கில், அரசுத் தரப்பில் வழக்கறிஞர் தியாகராஜன் ஆஜரானார்.


