ADDED : செப் 27, 2011 09:36 PM
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் பெட்ரோல் 'பங்க்' நடத்துபவர் ராஜன்.
அதே பகுதியை சேர்ந்த ரயில்வே கான்ட்ராக்டர் செல்வராஜூவின் மேனேஜர் பெருமாள், பெட்ரோல் பிடிக்க சென்றார். 'கடன் நிலுவை இருப்பதால் தர முடியாது,' என, ராஜன் மறுத்தார். இதில் தகராறு ஏற்பட்டு, தாக்கப்பட்டதாக, மேனேஜர் பெருமாள் புகார் கொடுத்தார். போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து கான்ட்ராக்டர் செல்வராஜ் கூறுகையில், ''நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பொய் புகார் கொடுக்கவில் லை,'' என்றார்.


