ADDED : ஆக 09, 2011 02:46 AM
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த பெரிய குத்தகையில் உள்ள அங்காடியில்
எம்.எல்.ஏ., காமராஜ் திடீர் ஆய்வு செய்தார்.அங்கு பொதுமக்களுக்கு
வழங்கப்படும் அரிசி போன்ற பொருட்கள் தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்தார்.
பின்னர் அங்காடி விற்பனையாளரிடம் அரிசு உள்ளிட்ட தரம் இல்லாத எந்த
பொருட்களையும் கண்டிப்பாக பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது என்றும், அவ்வாறு
தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டால் தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்தார்.
தமிழ்நாடு நுகார்பொருள் வாணிப கழக மாவட்ட அமைப்பு செயலாளர் அருணன், பஞ்.,
செயலாளர் சுரேஷ் ஆகியோர் உடன் சென்றனர்.


