Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளிகொலை: போலீசார் விசாரணை

என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளிகொலை: போலீசார் விசாரணை

என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளிகொலை: போலீசார் விசாரணை

என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளிகொலை: போலீசார் விசாரணை

ADDED : செப் 16, 2011 03:18 AM


Google News
பண்ருட்டி:பண்ருட்டி அருகே முந்திரிதோப்பில் என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 48;. இவர் என்.எல்.சி.,யில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தினமும் 6 மணிக்கு வேலைக்கு செல்லும் அவர் இரவு 8 மணிக்கு தான் வீடு திரும்புவது வழக்கம். நேற்று காலை சுப்ரமணியன் வழக்கம்போல் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.கீழக்குப்பத்தில் உள்ள ஒரு முந்திரிதோப்பில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி., ஆரோக்கியம், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் சுயம்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தது சுப்ரமணியன் என்பது தெரிய வந்தது.மேலும் இறந்த சுப்ரமணியன் உடம்பில் பல இடங்களில் வெட்டு காயங்கள் உள்ளதால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us