கற்பித்தல் திறன்மேம்பாட்டு பயிற்சி
கற்பித்தல் திறன்மேம்பாட்டு பயிற்சி
கற்பித்தல் திறன்மேம்பாட்டு பயிற்சி
ADDED : செப் 25, 2011 03:27 AM
மதுரை:மதுரை காமராஜ் பல்கலை கல்வியியல் ஆராய்ச்சி மையம் சார்பில்,
கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி
துவங்கியது. தலைவர் தங்கச்சாமி தலைமை வகித்தார். அவர்
பேசியதாவது:ஆசிரியர்கள் கற்பிக்கும்போது, மாணவர்கள் மத்தியில் சில
எதிர்பாராத இடர்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காண,
ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த இப்பயிற்சி அளிக்கப்படுகிறது, என்றார்.
கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வியியல் கல்லூரி முதல்வர் முத்தையா
பேசியதாவது: தகவல் தொடர்பில் துல்லியம், சுருக்கம், தெளிவு முக்கியம்.
ஆசிரியரின் பேச்சு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
கற்பித்தலில் சிந்தனை,
அறிவை மேம்படுத்துதல், தாக்கம், மதிப்பீடு, திட்டமிடுதல் அடங்கியிருக்க
வேண்டும். குழந்தைகள் அறிவாளிகள் என நினைப்பது தவறு.
அவர்கள் வெறும் தகவல்களைத்தான் சேகரித்து வெளிப்படுத்துகின்றனர். ஆசியாவில்
வளர்ச்சியடைந்த சிங்கப்பூர், ஜப்பானில் கல்விமுறை சிறப்பாக உள்ளது,
என்றார். உதவி பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார். பயிற்சி இன்று
நிறைவடைகிறது.


