/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
ADDED : ஜூலை 13, 2011 11:52 PM
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த நல்லானூர் ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரிக்கு
பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மற்றும்
எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவ, மாணவிகள் கள ஆய்வு பயணம் மேற்கொண்டனர்.
மாணவர்கள்
மற்றும் ஆசிரியர்களை கல்லூரி முதல்வர் தொல்காப்பிய அரசு, இயக்குனர்
வெங்கடேசன் ஆகியோர் வரவேற்றனர். மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில்
கட்டிடவியல், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர், இயந்திரவியல் உள்ளிட்ட
ஆய்வகங்களை இணையதள இணைப்பு நவீன நூலகம், விளையாட்டு திடல்கள் ஆகிய
இடங்களுக்கு சென்று கள ஆய்வு செய்தனர். மாணவர்களுக்கு கல்லூரி
பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர். தலைமையாசிரியர் (பொ) செல்வம்,
உதவித்தலைமை ஆசிரியர் செந்தமிழ் செல்வன் தலைமையில் 12 ஆசிரிர்கள்
களப்பயணத்தில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் குமரன்,
சசிமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். * சிக்கம்பட்டி அரசு
நடுநிலைப்பள்ளி மாணவர்கள் களப்பயணமாக முத்தம்பட்டி ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி
கோவில், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களுக்கு களப்பயணம் மேற்கொண்டனர். அங்கு
கோவில் வரலாறு குறித்தும், ரயில்வே ஸ்டேஷன் செயல்பாடுகள், ரயில் வரும்
நேரம், ரயில் டிக்கெட் முன் பதிவு, ரயில்வே பாதைகள் குறித்த தகவல்கள்
மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தலைமையாசிரியர் தாரா, ரவி,
ஆசிரியர்கள் மார்க்கபந்து, உதவி ஆசிரியர் மஞ்சுளா, கலைச்செல்வி உட்பட
ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


