ADDED : செப் 07, 2011 11:01 PM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சியில் உள்ளாட்சி தேர்லுக்கு போட்டியிட தி.மு.க., வினர் விருப்ப மனு கொடுத்தனர்.அருப்புக்கோட்டை கே.கே.எஸ்.
எஸ்.என்., திருமண மண்டபத்தில், நகராட்சி தலைவர் கவுன்சிலர்கள், ஒன்றிய குழு கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான விருப்ப மனு வாங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில், தி.மு.க. தலைமை தணிக்கை குழு உறுப்பினர் காசிநாதன் மனுக்களை வாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார், நகர செயலர் மணி, ஒன்றிய செயலர் சாகுல்அமீது, ஒன்றிய தலைவர் சுப்பாராஜ், நகராட்சி தலைவர் சிவபிரகாசம், பழனிச்சாமி மனு வழங்கினர்.விருதுநகர்: விருதுநகர் வி.வி.எஸ்., திருமண மண்டபத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.,சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைக்கழக பிரதிநிதி ஏ.ஆர்.வி.,காசிநாதன் பெற்றனர். விருதுநகர் நகராட்சி தலைவராக போட்டியிட எஸ்.ஆர்.எஸ்., தனபாலன், வார்டுகளுக்கு போட்டியிட 36 மனுக்கள் பெறப்பட்டன. ஒன்றி சேர்மன் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் உட்பட 47 பேர் மனு செய்தனர். செப். 12 வரை அவகாசம் இருப்பதால் மனுக்கள் வழங்க வாய்ப்புள்ளது.


