Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி எறையசமுத்திரத்தில் சுடுகாடு காம்பவுண்ட் அமைக்கப்படும்

தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி எறையசமுத்திரத்தில் சுடுகாடு காம்பவுண்ட் அமைக்கப்படும்

தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி எறையசமுத்திரத்தில் சுடுகாடு காம்பவுண்ட் அமைக்கப்படும்

தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி எறையசமுத்திரத்தில் சுடுகாடு காம்பவுண்ட் அமைக்கப்படும்

ADDED : அக் 09, 2011 12:19 AM


Google News
பெரம்பலூர்: எறையசமுத்திரம் சுடுகாடுக்கு காம்பவுண்ட் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என தே.மு.தி.க., வேட்பாளர் வாசு ரவி உறுதியளித்தார்.பெரம்பலூர் மேற்கு மாவட்ட பஞ்சாயத்து 6வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வாசு ரவி நேற்று எறையசமுத்திரம், அய்யலூர், குடிக்காடு ஆகிய கிராமத்தில் ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: எறையசமுத்திரம் சுடுகாடுக்கு காம்பவுண்ட் அமைக்கவும், சமுதாயக்கூடம், நூலகம் கட்டவும், சாலை மற்றும் குடிநீர் வசதி, மானியத்தெருவில் மேல்நிலைநீர்த்தேக்கத்தொட்டி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.இதில் மாவட்ட செயலாளர் துரை காமராஜ், துணை செயலாளர் கண்ணுசாமி, பொருளாளர் சீனி வெங்கடேசன், தேர்தல் பொறுப்பாளர் சின்னசாமி, வக்கீல் அணி மாவட்ட செயலாளர் சேதுபதி, கிளை செயலாளர்கள் பூமாலை, குணசேகர், ரவி, கோவிந்தராஜ், ராமராஜ், ராமர், தமிழரசன், பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us