/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/மாவட்ட பஞ்சாயத்து தி.மு.க., தலைவர் சரண்மாவட்ட பஞ்சாயத்து தி.மு.க., தலைவர் சரண்
மாவட்ட பஞ்சாயத்து தி.மு.க., தலைவர் சரண்
மாவட்ட பஞ்சாயத்து தி.மு.க., தலைவர் சரண்
மாவட்ட பஞ்சாயத்து தி.மு.க., தலைவர் சரண்
ADDED : செப் 16, 2011 12:00 AM
நாகர்கோவில் : நில மோசடி வழக்கில்மாவட்ட பஞ்சாயத்து தி.முக.
தலைவர் அஜிதா கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் அஜிதா . இவருக்கு சொந்தமான நிலத்தை நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த தயா பாக்கியசிங் என்பவருக்கு விற்பனை செய்தனர். இந்த நிலத்தில் ஒரு பகுதி வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருவதால் தடையில்லா சான்றிதழ் வாங்கி தருவதாக கூறிய அஜிதா அதை பெற்றுத்தரவில்லை. மாறாக பணத்தை முழுமையாக கேட்டு மிரட்டியதோடு, போலி பத்திரம் தயாரித்து வேறு நபருக்கு விற்பனை செய்து விட்டார். இது தொடர்பாக அஜிதா மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தி.மு.க. உயர் நிலை செயல்திட்ட க்குழு உறுப்பினர் ஜி.எம்.ஷா உள்ளிட்டோர் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே சுரேஷ்ராஜன் முன்ஜாமீன் பெற்று விட்டார். இந்நிலையில் அஜிதா, சரவணபிரசாத், சப் ரெஜிஸ்டர் நூர்ஜகான் ஆகியோர் மாவட்ட கோர்ட் உத்தரவு படி நாகர்கோவில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றனர்.


