ADDED : ஆக 20, 2011 10:15 PM

''வரும், 2013ம் கல்வியாண்டு முதல், இளம் கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு, தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம், ஒடுக்கப்பட்ட இன மாணவர்களின் உயர் கல்வி கனவுகளை பொசுக்கும் முயற்சி. சாதாரண ஏழை மக்கள் படிக்கும், இளம் கலை பட்டப் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வருவது, அடித்தட்டு மாணவர்களின் உயர்கல்விக்கு விடுக்கப்படும் சவாலாகும். அனைத்து படிப்புகளுக்கும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பது, மாநில அரசின் கல்வி உரிமையை பறிப்பதாகும். இந்நிலை நீடித்தால், மாநில பட்டியலில் இருந்து கல்வியை பறித்து மத்திய பட்டியலில் சேர்த்து விடுவர்.''
- ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்.


