/உள்ளூர் செய்திகள்/தேனி/தினமும் இரண்டு முறை குடிநீர் சப்ளை நலத்திட்டங்கள் வழங்க முன்உரிமை : வேட்பாளர் முருகேசன் பேட்டிதினமும் இரண்டு முறை குடிநீர் சப்ளை நலத்திட்டங்கள் வழங்க முன்உரிமை : வேட்பாளர் முருகேசன் பேட்டி
தினமும் இரண்டு முறை குடிநீர் சப்ளை நலத்திட்டங்கள் வழங்க முன்உரிமை : வேட்பாளர் முருகேசன் பேட்டி
தினமும் இரண்டு முறை குடிநீர் சப்ளை நலத்திட்டங்கள் வழங்க முன்உரிமை : வேட்பாளர் முருகேசன் பேட்டி
தினமும் இரண்டு முறை குடிநீர் சப்ளை நலத்திட்டங்கள் வழங்க முன்உரிமை : வேட்பாளர் முருகேசன் பேட்டி
தேனி : தேனி நகர மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெற்றுத்தருவது, நகரில் தட்டுப்பாடின்றி தினமும் இருமுறை குடிநீர் வழங்குவதற்கு முன் உரிமை அளிக்கப்படும் என அ.தி.மு.க., வேட்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
வறுமை கோடுக்கு கீழ் வாழும் மக்களுக்கு ஆடு, மாடுகளும் வழங்குவோம். பசுமை வீடு திட்ட பயனாளிகளும், திருமண உதவி, முதியோர் உதவி திட்ட பயனாளிகளுக்கும் அரசின் உதவிகள் தாமதம் இன்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். தேனி நகராட்சியில் அடித்தட்டு மக்களை சென்றடையும் வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுவேன். குடிநீர்: குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வர் வைகை அணையில் இருந்து தேனிக்கு குடிநீர் கொண்டு வர 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தி தேனியில் தினமும் இரண்டு நேரமும் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
பைபாஸ் ரோட்டில் விபத்துக்களை தடுக்கும் வகையில் 100 அடியாக அகலப்படுத்துவேன். முடங்கி கிடக்கும் திட்டச்சாலைகள் அனைத்தையும் மீண்டும் திறப்பேன். பாதாள சாக்கடை பணிகளை முடித்து, அனைத்து ரோடுகளையும் நல்ல முறையில் சீரமைத்து கொடுப்பேன். தேனி பஸ்ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளை முடித்து ஆட்டோக்களுக்கு நிரந்தர ஸ்டாண்ட் வசதி செய்து கொடுப்பேன். தேனி பெரியகுளம் ரோட்டில், ரோட்டின் நடுவே தடுப்புகளை அமைத்து, ரோட்டின் இருபுறமும் பிளாட்பாரங்கள் அமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுப்பேன். தேனி பாலன் நகர், குறிஞ்சி நகர், வள்ளிநகர், விஸ்வநாததாஸ் காலனியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்து, அந்த பகுதி மக்களின் தொழில் மேம்பாட்டுக்கு தேவையான வசதிகளும் செய்து தருவேன். வீரப்ப அய்யனார் கோயில் ரோட்டை சீரமைத்து வசதி செய்து கொடுப்பேன் என்றார்.


