Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/எல்லாபுரத்தில் சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்

எல்லாபுரத்தில் சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்

எல்லாபுரத்தில் சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்

எல்லாபுரத்தில் சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்

ADDED : அக் 07, 2011 01:07 AM


Google News

ஊத்துக்கோட்டை : எல்லாபுரம் ஒன்றியத்தில், அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

வரும் 17ம் தேதி முதற்கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் எல்லாபுரம் ஒன்றியத்தில் நடைபெறுகிறது. இங்கு இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள், 20 ஒன்றிய கவுன்சிலர்கள், 53 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 369 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள் ரவிச்சந்திரன், சந்திரன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் பாபு, அண்ணாமலை மற்றும் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்களை ஆதரித்து நடிகர் ஆனந்தராஜ் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார் உட்பட முக்கிய பிரமுகர்கள் இருந்தனர். தே.மு.தி.க., சார்பில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., சி.எச். சேகர், மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் மாதவன், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் பிரியா சம்பத் மற்றும் ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தனர்.



அவருடன் எல்லாபுரம் ஒன்றியச் செயலர் விஜயபிரசாத், கேப்டன் மன்ற மாவட்டச் செயலர் ஞானமூர்த்தி மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க., சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் எல்லாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலர் மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் முருகன், சுஜாதா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இவர்கள் சூளைமேனியில் துவங்கி ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு ஆதரவு திரட்டினர். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மூன்று முக்கிய கட்சிகளைச் சேர்ந்தவர்களின் தேர்தல் பிரசாரத்தில், எல்லாபுரம் ஒன்றியத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us