/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/எல்லாபுரத்தில் சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்எல்லாபுரத்தில் சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்
எல்லாபுரத்தில் சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்
எல்லாபுரத்தில் சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்
எல்லாபுரத்தில் சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்
ஊத்துக்கோட்டை : எல்லாபுரம் ஒன்றியத்தில், அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
அவருடன் எல்லாபுரம் ஒன்றியச் செயலர் விஜயபிரசாத், கேப்டன் மன்ற மாவட்டச் செயலர் ஞானமூர்த்தி மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க., சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் எல்லாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலர் மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் முருகன், சுஜாதா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இவர்கள் சூளைமேனியில் துவங்கி ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு ஆதரவு திரட்டினர். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மூன்று முக்கிய கட்சிகளைச் சேர்ந்தவர்களின் தேர்தல் பிரசாரத்தில், எல்லாபுரம் ஒன்றியத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.


