Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.4.90 லட்சம் நகை கொள்ளை

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.4.90 லட்சம் நகை கொள்ளை

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.4.90 லட்சம் நகை கொள்ளை

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.4.90 லட்சம் நகை கொள்ளை

ADDED : ஜூலை 14, 2011 03:50 AM


Google News

மதுரை : மதுரை நேருநகர் திருநாவுக்கரசு தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பி.டி.ஓ.,காசிப்பாண்டியன் (62) வீட்டில் யாரும் இல்லாதபோது, 4 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 32 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

நேற்று காலை காசிப்பாண்டியன் சிவகங்கைக்கும், மனைவி வசந்தா (58) தென்காசிக்கும், மகள்கள் பவானி, பகவதி ஆகியோர் வேலைக்குச் சென்றுவிட்டனர். பகவதி மாலை 3 மணிக்கு வந்தபோது உள்கதவு, பீரோ உடைக்கப்பட்டு, 32 பவுன் நகை, 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. துணைக் கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை விசாரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. திருடுபோன நகை, பணத்தின் மொத்த மதிப்பு 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்.

காசிப்பாண்டியன் மற்றும் உறவினர்களுக்கு இடையே சொத்துப் பிரச்னை உள்ளதால், அவர்களில் யாராவது முன்விரோதத்தில் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us