Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கோயம்பேடு மேம்பாலத்திற்குக் கீழே அடியெடுத்து வைக்கும் ஆக்கிரமிப்பு

கோயம்பேடு மேம்பாலத்திற்குக் கீழே அடியெடுத்து வைக்கும் ஆக்கிரமிப்பு

கோயம்பேடு மேம்பாலத்திற்குக் கீழே அடியெடுத்து வைக்கும் ஆக்கிரமிப்பு

கோயம்பேடு மேம்பாலத்திற்குக் கீழே அடியெடுத்து வைக்கும் ஆக்கிரமிப்பு

ADDED : செப் 03, 2011 11:00 PM


Google News

சென்னை : நெரிசலை சமாளிக்க கட்டப்பட்ட கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ்ப் பகுதி கிடப்பில் போடப்பட்டதால், அந்த இடத்தை தனியார் லாரி, வேன், பஸ்கள் ஆக்கிரமிக்கத் துவங்கி விட்டன.

தற்போது துளிர்விடும் இந்த ஆக்கிரமிப்பு, ஆரம்பத்திலேயே அகற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். புறநகர் பஸ் நிலையம், மார்க்கெட் என, மாநகரின் முக்கிய பகுதியாக விளங்கும் கோயம்பேட்டில் நெரிசலைத் தவிர்க்க முடியாது. அதிக மக்கள் கூடும் இப்பகுதியின் நூறடி சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக பூந்தமல்லி, மதுரவாயல் வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாநகருக்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் நூறடி சாலையில் கோயம்பேட்டை நோக்கி வரும் வாகனங்கள் என, இந்த பகுதி எப்போதும் நெரிசலில் மூழ்கும். இதைக் குறைக்கும் வகையில், கோயம்பேடு மேம்பாலம் கட்டப்பட்டது. கடந்த 10 மாதங்களாக செயல்பாட்டுக்கு வந்த இந்த மேம்பாலத்தின் பணி முடிந்துள்ள நிலையில், அதன் கீழ்ப்பகுதியை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். சிறிய இடம் கிடைத்தாலும், அதை ஆக்கிரமித்து கொட்டகை போட்டு வாடகைக்கு விடப்படும் சென்னையில், இவ்வளவு பெரிய இடம் முக்கிய சாலையின் ஓரம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தனியார் லாரி, வேன் மற்றும் கல்லூரி பேருந்துகள், அங்கு நாள் முழுவதும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. கனரக வாகனங்கள் பகல் பொழுதில் மாநகருக்குள் பயணிக்கத் தடையுள்ள நிலையில், இங்கு நிறுத்தி வைக்க தொடங்கியுள்ளனர். தற்போது ஒன்று, இரண்டு என நிறுத்தப்படும் லாரிகள், சில நாட்களில் பல மடங்காக உயரும் நிலையுள்ளது. குறிப்பாக, சென்னை புறநகர் பகுதியான மதுரவாயல் மேம்பாலத்திற்குக் கிழே லாரிகள் நிறுத்தப்பட்டு, சிலர் காசு பார்ப்பது போல் இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கும், தனி நபர் சிலர் ரசீது கொடுத்து பணம் பெற வாய்ப்புள்ளது. இந்த ஆக்கிரமிப்பை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். குறிப்பாக, இந்த இடத்தில் பூங்கா அமைக்கும் பட்சத்தில், இடம் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாவதைத் தடுக்க முடியும். இதை உணர்ந்து, சம்பந்தப்பட்ட துறையினர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us