/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பட்டாசு ஆலையில் விபத்து :4 தொழிலாளர்கள் காயம்பட்டாசு ஆலையில் விபத்து :4 தொழிலாளர்கள் காயம்
பட்டாசு ஆலையில் விபத்து :4 தொழிலாளர்கள் காயம்
பட்டாசு ஆலையில் விபத்து :4 தொழிலாளர்கள் காயம்
பட்டாசு ஆலையில் விபத்து :4 தொழிலாளர்கள் காயம்
ADDED : அக் 06, 2011 11:56 PM
சிவகாசி : சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்ததில், 2பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
சிவகாசி நமஸ்கரித்தான்பட்டியில் சுகுமார் என்பவரது 'கிருஷ்ணா பயர் ஒர்க்ஸ்' பட்டாசு ஆலை உள்ளது. இங்குள்ள ஒரு அறையில் 4 பெண் தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுக்கு மணி மருந்து செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 12.30 மணிக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருந்தபோது, பட்டாசில் மணிமருந்து செலுத்தும்போது, உராய்வு ஏற்பட்டு தீ பற்றியது. கண் இமைக்கும் நேரத்தில் தீ, பட்டாசுகளில் பரவி வெடி விபத்தாக மாறியது. காளையார்குறிச்சியை சேர்ந்த சுப்புலட்சுமி,40 , தங்கம்மாள்,55, கூடம்மாள், 57, பாப்பா 38, காயம் அடைந்தனர். சிவகாசி தீயணைப்பு அலுவலர் சண்முகராஜா தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். காயம் அடைந்த 4பேரும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ராஜேந்திர பாலாஜி எம்.எல்.ஏ., முனுசாமிஆர்.டி.ஓ., பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். 100 சதவீதம் தீக்காயமடைந்த சுப்புலட்சுமி, தங்கம்மாள் தீவிர சிகிச்சைக்கு மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


