ADDED : செப் 07, 2011 12:38 AM
உடுமலை : உடுமலையில் நடந்த குறை தீர் முகாமில் 16 மனுக்கள் பெறப்பட்டன.
உடுமலை தாலுகா அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர்
ராஜம்மாள் தலைமயில், குறை தீர் முகாம் நடந்தது. முகாமில், முதியோர்
உதவித்தொகை கேட்டு 7, வீட்டுமனைப்பட்டா கோரி 4, ரேஷன் கார்டு கோரி 1
மற்றும் இதர இனங்களில் 4 மனுக்கள் என மொத்தம் 16 மனுக்கள் பெறப்பட்டன.


