/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/அக்.,15 முதல் வீடுதோறும் பூத் சிலிப் புதுகை மாவட்ட கலெக்டர் உறுதிஅக்.,15 முதல் வீடுதோறும் பூத் சிலிப் புதுகை மாவட்ட கலெக்டர் உறுதி
அக்.,15 முதல் வீடுதோறும் பூத் சிலிப் புதுகை மாவட்ட கலெக்டர் உறுதி
அக்.,15 முதல் வீடுதோறும் பூத் சிலிப் புதுகை மாவட்ட கலெக்டர் உறுதி
அக்.,15 முதல் வீடுதோறும் பூத் சிலிப் புதுகை மாவட்ட கலெக்டர் உறுதி
ADDED : அக் 12, 2011 02:36 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டம்
நடந்தது.
இதற்கு தலைமை வகித்து கலெக்டர் பேசியதாவது: உள்ளாட்சி தேர்தல்
அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இதை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி வேட்பாளர்கள் மற்றும் தேர்தல்
பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் அனைவரும் பின்பற்றவேண்டும்.
மாவட்டத்தில் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடைபெறவுள்ள
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தேர்தலுக்கு
இரண்டு நாட்களுக்கு முன்பாக வீடுகள்தோறும் சென்று வாக்காளர்கள்
அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பூத் ஸ்லிப் வழங்கப்படும்.
17ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள புதுக்கோட்டை நகராட்சி உள்ளிட்ட
பகுதிகளில் 15, 16ம் தேதிகளில் விடுதலின்றி பூத் ஸ்லிப் வழங்கப்படும்.
இதுபோன்று 19ம் தேதி இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ள அறந்தாங்கி
நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 17, 18ம் தேதிகளில் பூத் ஸ்லிப்
வழங்கப்படும். தேர்தல் தொடர்பாக ஏதேனும் குறைபாடுகள், சந்தேகங்கள்
இருந்தால் மாவ ட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தே ர்தல் கட்டுப்பாடு பிரிவு
அலுவலகத்தை நேரிலோ அல்லது டெலிஃபோன் மூலமாகவோ தொடர்புகொண்டு
தெரிவிக்கலாம். தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடக்கும் விதமாக
மாவட்ட நிர்வாகத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முழு
ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் எஸ்.பி.,
முத்துசாமி, டி.ஆர்.ஓ., பரமசிவம், ஆர்.டி.ஓ., முத்துமாரி உட்பட அரசுத்துறை
அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.


