/உள்ளூர் செய்திகள்/சேலம்/பகுஜன் வேட்பாளர்கள் வாக்குறுதி அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவோம்பகுஜன் வேட்பாளர்கள் வாக்குறுதி அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவோம்
பகுஜன் வேட்பாளர்கள் வாக்குறுதி அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவோம்
பகுஜன் வேட்பாளர்கள் வாக்குறுதி அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவோம்
பகுஜன் வேட்பாளர்கள் வாக்குறுதி அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவோம்
ADDED : அக் 06, 2011 02:17 AM
சேலம்: 'சேலம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தலில்
வெற்றி பெற்றால், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வோம்' என்று
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.
சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு, ஆறு பகுஜன்
சமாஜ் கட்சி வேட்பாளர்கள், யானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
அய்யம்பெருமாம்பட்டி, மல்லமூப்பம்பட்டி பஞ்சாயத்தை உள்ளடக்கிய வார்டு இரண்டில் ராஜீ (51)போட்டியிடுகிறார்.
செட்டிசாவடி, மல்லமூப்பம்பட்டி பஞ்சாயத்தை உள்ளடக்கிய வார்டு 3ல் ஜெயந்தி
சிவா(30) போட்டியிடுகிறார். சர்க்கார் கொல்லப்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி
பஞ்சாயத்தை உள்ளடக்கிய வார்டு 4ல் ரத்தினக்குமார் (45) போட்டியிடுகிறார்.
வட்டமுத்தம்பட்டி, தளவாய்பட்டி பஞ்சாயத்தை உள்ளடக்கிய 5 வது வார்டில்
லட்சுமிராஜி போட்டியிடுகிறார். (இவர் முன்னாள் சேலம் ஒன்றியக் குழு தலைவராக
பொறுப்பு வகித்துள்ளார்).
ஆண்டிப்பட்டி, வேடுகத்தாம்பட்டி பஞ்சாயத்தை உள்ளடக்கிய 8வது வார்டில் விஜயகுமார்(32) போட்டியிடுகிறார்.
எருமாப்பாளையம், சன்னியாசி குண்டு பஞ்சாயத்தை உள்ளடக்கிய 9வது வார்டில் கருமலை(37) போட்டியிடுகிறார்.
தேர்தல் வாக்குறுதி குறித்து ஆறு வேட்பாளர்களும் தெரிவித்துள்ளதாவது:
நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி
ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு, யானை சின்னத்தில் போட்டியிடுகிறோம்.
மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, ஆதரவு அளித்து வருகின்றனர். நாங்கள்
வெற்றி பெற்றால், அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, சாக்கடை வசதி,
தெருவிளக்கு ஆகியவற்றை செய்து கொடுத்து, பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி
செய்வோம். பொதுமக்கள் எங்களுக்கு யானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


