/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி கோர்ட்டில் ஈரோடு "மாஜி' ஆஜர்திருச்சி கோர்ட்டில் ஈரோடு "மாஜி' ஆஜர்
திருச்சி கோர்ட்டில் ஈரோடு "மாஜி' ஆஜர்
திருச்சி கோர்ட்டில் ஈரோடு "மாஜி' ஆஜர்
திருச்சி கோர்ட்டில் ஈரோடு "மாஜி' ஆஜர்
ADDED : ஆக 25, 2011 01:50 AM
திருச்சி: நீதிமன்ற உத்தரவையடுத்து, ஈரோடு முன்னாள் அமைச்சர் ராஜா நேற்று திருச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
ஈரோட்டைச் சேர்ந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா.
இவரை கொலை மிரட்டல் மற்றும் நில அபகரிப்பு வழக்கில் போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், 'முன்னாள் அமைச்சர் ராஜா திருச்சியில் தங்கியிருந்து, தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நேற்று திருச்சி வந்த முன்னாள் அமைச்சர் ராஜா, திருச்சி ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு முதல் ஆளாக ஆஜராகி கையெழுத்திட்டு உடனடியாகச் சென்றுவிட்டார்.


