Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/கார் மீது லாரி மோதல் ஒருவர் பலி

கார் மீது லாரி மோதல் ஒருவர் பலி

கார் மீது லாரி மோதல் ஒருவர் பலி

கார் மீது லாரி மோதல் ஒருவர் பலி

ADDED : செப் 03, 2011 02:58 AM


Google News

சமயநல்லூர் : ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீஸ்வரன், 56.

இவர், மனைவி அமராவதி, 46, மகன் பிரசன்னா, 26, மருமகள் கலைவாணி, 20, ஆகியோருடன் கரூரில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ராமநாதபுரத்திற்கு மாருதி ஆல்டோ காரில் (டிஎன் 55 எல் 2476) வந்தனர். பிரசன்னா காரை ஓட்டினார். பரவை - விளாங்குடி சாலையில் முன்னால் சென்ற லாரியை முந்தும்போது, எதிர்புறம் வந்த லாரி, கார் மீது மோதியது. இதில், காரில் இருந்த நால்வரும் காயமடைந்தனர்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வக்கீஸ்வரன் இறந்தார். சமயநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us