/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கிட்னி பாதிப்பு கிராமத்தில் சுகாதார துறையினர் ஆய்வு : "தினமலர்' செய்தி எதிரொலிகிட்னி பாதிப்பு கிராமத்தில் சுகாதார துறையினர் ஆய்வு : "தினமலர்' செய்தி எதிரொலி
கிட்னி பாதிப்பு கிராமத்தில் சுகாதார துறையினர் ஆய்வு : "தினமலர்' செய்தி எதிரொலி
கிட்னி பாதிப்பு கிராமத்தில் சுகாதார துறையினர் ஆய்வு : "தினமலர்' செய்தி எதிரொலி
கிட்னி பாதிப்பு கிராமத்தில் சுகாதார துறையினர் ஆய்வு : "தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : ஜூலை 13, 2011 10:16 PM
காரியாபட்டி : காரியாபட்டி அருகே கிட்னி பாதிப்புக்குள்ளான கிராமங்களில் 'தினமலர்' செய்தி எதிரொலியாக சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள குடிநீரை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே எஸ்.மறைக்குளம், சத்திரம்புளியங்குளம் கிராமங்களில் கிட்னி பாதிப்பால் ஐந்து ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளது தொடர்பாக,' தினமலர்' இதழில் நேற்று செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, சுகாதாரத் துறையினர் இக்கிராமங்களுக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். குடிநீர் மாதிரிகளையும் ஆய்வுக்காக சேகரித்தனர்.' உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என ,கிராம மக்களிடம் உறுதி அளித்துள்ளனர்.


