/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மக்கள் பாராட்டும் வகையில் பணிகள் நடைபெறும் : கடையநல்லூர் அதிமுக.,வேட்பாளர் உறுதிமக்கள் பாராட்டும் வகையில் பணிகள் நடைபெறும் : கடையநல்லூர் அதிமுக.,வேட்பாளர் உறுதி
மக்கள் பாராட்டும் வகையில் பணிகள் நடைபெறும் : கடையநல்லூர் அதிமுக.,வேட்பாளர் உறுதி
மக்கள் பாராட்டும் வகையில் பணிகள் நடைபெறும் : கடையநல்லூர் அதிமுக.,வேட்பாளர் உறுதி
மக்கள் பாராட்டும் வகையில் பணிகள் நடைபெறும் : கடையநல்லூர் அதிமுக.,வேட்பாளர் உறுதி
கடையநல்லூர் : 'கடையநல்லூர் நகராட்சியில் அனைத்து பணிகளுமே மக்கள் பாராட்டும் வகையில் பெர்பெக்டாக நடக்கும்' என அதிமுக வேட்பாளர் முத்துலெட்சுமி உறுதிபட தெரிவித்தார்.
கடையநல்லூர் நகராட்சியில் பெரும்பாலான சாலைகள் கடந்த 5 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் கிடப்பில் உள்ளன. முக்கிய சாலைகளும் சீரற்று கிடக்கின்றன. இந்த சாலைகள் எல்லாம் அதிமுக வெற்றி பெற்றால் நிச்சயமாக பராமரிக்கப்படும். கடையநல்லூர் நகராட்சியில் சுத்தம், சுகாதாரம் பேணி பாதுகாக்கப்படும். பொதுமக்கள் கேட்கும் அத்தனை கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றி வைக்கப்படும். மக்கள் கேட்டதை கொடுக்கும் அதிமுக அரசு தமிழகத்தில் ஆட்சி புரிவதால் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
கடையநல்லூர் நகராட்சியை தமிழகத்தில் நம்பர் 1 நகராட்சியாக உருவாக்கி தருவதுடன், நகராட்சியில் எல்லா பணிகளும் மக்கள் பாராட்டும் வகையில் பெர்பெக்டாக நடக்கும்'' என்றார். வேட்பாளருடன் நகர செயலாளர் கிட்டுராஜா, நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் முருகன், வார்டு செயலாளர் அமராவதி முருகன், மெடிக்கல் சரவணன், மேலக்கடையநல்லூர் மாரித்துரை உடனிருந்தனர்.


