Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மகளிர் குழு கூட்டமைப்பு கூட்டம்

மகளிர் குழு கூட்டமைப்பு கூட்டம்

மகளிர் குழு கூட்டமைப்பு கூட்டம்

மகளிர் குழு கூட்டமைப்பு கூட்டம்

ADDED : ஜூலை 25, 2011 11:02 PM


Google News

பந்தலூர் : பந்தலூர் அருகே அய்யன் கொல்லி, எருமாடு பகுதிகளில் செயல்படும் மகளிர் குழுக்களின் கூட்டமைப்பு கூட்டம் கல்லிச்சால் ஜி.டி.ஆர்.

பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் காசநோய், பொது சுகாதரம், தேர்தலில் பங்கேற்பது குறித்து விரிவாக பேசப்பட்டது. மேலும் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களை போட்டியிட வைப்பது; குழு வேட்பாளர்களுக்கு அனைத்து மகளிர் குழுவினரும் ஒத்துழைப்பது; நோய்பரவுவதை தடுக்கவும், பொது சுகாதாரத்தை பேணிகாக்கவும் வீட்டிற்கு ஒரு தனி கழிப்பிடம் அமைத்து கொள்ளுதல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தாமரை மகளிர் குழு ஊக்குனர் நாராயணி வரவேற்றார்.

குறிஞ்சி மகளிர் குழு நிர்வாகி சாஜி தலைமை வகித்தார். கிரேசி மகளிர் குழு நிர்வாகி இந்திராணி, சினேகா மகளிர் குழு நிர்வாகி மேரி முன்னிலை வகித்தனர். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், வார்டு உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். சூரியா மகளிர் குழு நிர்வாகி ஓமனா நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us