ம.பி., முதல்வர் பெயரில் "பேஸ்புக்'கில் போலி :பள்ளி மாணவன் சிக்கினான்
ம.பி., முதல்வர் பெயரில் "பேஸ்புக்'கில் போலி :பள்ளி மாணவன் சிக்கினான்
ம.பி., முதல்வர் பெயரில் "பேஸ்புக்'கில் போலி :பள்ளி மாணவன் சிக்கினான்
ADDED : ஜூலை 26, 2011 12:59 AM

போபால் : மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பெயரில் 'பேஸ்புக்' தளத்தில் போலிக் கணக்கு துவங்கிய பள்ளி மாணவனை, சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
உலகின் பிரபல சமூக இணையதளம் 'பேஸ்புக்'. இதில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பெயரில், போலிக் கணக்கு துவங்கிய விஷமி ஒருவர், அந்தத் தளத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும், மூத்த காங்., தலைவர்களை கேலி செய்யும் கார்ட்டூன்களையும், வெளியிட்டு வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் சவுகான், இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, விசாரணை நடந்தது. முதற்கட்டமாக, 'பேஸ்புக்' இணையதளத்தின் இந்தியப் பிரிவு அலுவலகத்திடம் உதவி கேட்கப்பட்டது. எனினும், இதுபற்றி தகவல் தெரிவிக்க, இந்திய அலுவலகம் மறுத்துவிட்டது. இதையடுத்து, இன்டர்போல் உதவியுடன், 'பேஸ்புக்' தளத்தின் தலைமை அலுவலகத்தின் கவனத்திற்கு, இவ்விவகாரம் கொண்டுசெல்லப்பட்டது.
அதன்படி, முதல்வர் சவுகான் பெயரில் செயல்படும், போலிக் கணக்கின் முகவரி இந்தூர் மாவட்டம், மால்ஹார்கஞ்ச் பகுதியில் உள்ள பிரவுசிங் மையத்திலிருந்து பயன்படுத்தப்படுவது, தெரியவந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட பிரவுசிங் மையத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, +2 மாணவன் ஒருவன் பிடிபட்டான். மாணவனை கைது செய்து, போபால் கொண்டு சென்ற போலீசார், சைபர் குற்றங்கள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில், அவன்மீது வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.


