/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்புவட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு
வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு
வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு
வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு
ADDED : ஜூலை 24, 2011 02:25 AM
திருப்பூர் : அவிநாசி வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு செல்லும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
அவிநாசி தாலுகா அலுவலகத்தில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு தினமும் 200க்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டு, பெயர் மாற்றம், நீக்கம், கடை மாற்றம், கார்டு மாற்றம் உள்ளிட்டவை கோரி விண்ணப்பிக்கின்றனர்.அவிநாசி தாலுகாவில் ஊத்துக்குளி, குன்னத்தூர் ஆகிய பிர்கா இணைக்கப் பட்ட பின், வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து வருகிறது.
விண்ணப்பங்களுடன் செல்லும் பொதுமக்களை, அங்குள்ள அலுவலர்கள் பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழிப்பது தொடர்கிறது.நீண்ட வரிசையில் காத்திருந்து, விண்ணப்பத்தை அளிக்கும் பொதுமக்களிடம், அங்குள்ள அலுவலர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். சில நேரங்களில், விண்ணப்பத்துடன் வந்து விளக்கம் கேட்கும் கிராமப்புற மக்களை, ஒருமையில் திட்டுகின்றனர்; பொதுமக்கள் பலரும், வேறு வழியின்றி பொறுமை காக்கின்றனர். முறையான பதில் கிடைக்காமல், கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
பொதுமக்கள் சிலர் கூறியதாவது:அவிநாசி வட்ட வழங்கல் அலுவலகத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.ஏதாவது சந்தேகம் கேட்டால், முதியவர்கள் என்று கூட பார்க்காமல் அங்குள்ள பெண் அலுவலர்கள் திட்டுகின்றனர்; டி.எஸ்.ஓ., விடம் சொன்னால், அவரும் கண்டுகொள்வது இல்லை.பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ள ரேஷன் கார்டு விஷயத் தில், அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் மிக மோசமாக உள்ளது.
அவிநாசியிலிருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள ஊத்துக்குளி பகுதி கிராமத் திலிருந்து வருபவர்கள் நாள் முழுவதும் காத்திருக்கின்றனர்.அதிகாரிகளிடம் விண்ணப்பத்தை அளித்தால், ஏதாவது ஒரு காரணம் கூறி நிராகரிக்கின்றனர். இவ்வாறு அவிநாசி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடப்பது தொடர்கதையாக உள்ளது. புரோக்கர்களின் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது.கலெக்டர், மாவட்ட வழங்கல் அலு வலர் உடனே தலையிட்டு இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும். அதிகளவில் மக்கள் வருவதால், கூடுதல் பணியாளர்களை நியமித்து, மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க வேண்டும்; விண்ணப்பங்களுடன் வரும் அப்பாவி மக்களிடம், அலட்சியமாக நடந்துகொள்ளும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


