மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை
மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை
மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை
UPDATED : ஜூலை 24, 2011 06:46 PM
ADDED : ஜூலை 24, 2011 06:39 PM
பெரம்பலூர்: குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் முத்து(45). இவரது மனைவி காவேரி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது உண்டு. இந்நிலையில் இன்றுமதியம் மீண்டும்குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது முத்து, காவேரியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.