/உள்ளூர் செய்திகள்/தேனி/களையெடுக்கும் கருவியை பயன்படுத்தும் விவசாயிகள்களையெடுக்கும் கருவியை பயன்படுத்தும் விவசாயிகள்
களையெடுக்கும் கருவியை பயன்படுத்தும் விவசாயிகள்
களையெடுக்கும் கருவியை பயன்படுத்தும் விவசாயிகள்
களையெடுக்கும் கருவியை பயன்படுத்தும் விவசாயிகள்
ADDED : செப் 17, 2011 10:09 PM
தேனி : விவசாயிகள் மத்தியில் களையெடுக்கும் கருவியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.விவசாய கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மாற்று வழிமுறைகளை விவசாயிகள் தேடி வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தற்போது விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி வரும் கருவி களையெடுக்கும் கருவி. இதன் விலை 22 ஆயிரம் ரூபாய். இதில் 50 சதவீதம் விவசாய பொறியியல் துறை மானியம் வழங்குகிறது. பல பணியாளர்கள் செய்யும் வேலையை ஒரு களையெடுக்கும் கருவி செய்து முடித்து விடுகிறது.இதனால் விவசாயி களுக்கு செலவு குறைவதோடு, பணிகளும் வேகமாக தடையின்றி நடக்கின்றன. பெரியகுளம், போடி, தேனி பகுதி விவசாயிகள் அதிகளவு களையெடுக்கும் கருவியை பயன்படுத்தி வருகின்றனர்.