Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மதச்சடங்கில் பங்கேற்க மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அனுமதி

மதச்சடங்கில் பங்கேற்க மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அனுமதி

மதச்சடங்கில் பங்கேற்க மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அனுமதி

மதச்சடங்கில் பங்கேற்க மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அனுமதி

ADDED : செப் 03, 2011 10:44 PM


Google News

மும்பை:மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான முஸ்தபா தாஸாவுக்கு, அவரது வீட்டில் நடக்கும் மதச்சடங்கு விழாவில் கலந்துகொள்வதற்காக, தடா சிறப்பு கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.



கடந்த 1993ம் ஆண்டு, மும்பை நகரின் பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இதில், 257 பேர் உயிரிழந்தனர்; 574 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில், நூற்றுக்கும் மேற்பட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில், முக்கிய குற்றவாளியான முஸ்தபா தாஸா என்பவர், கடந்த 2003ம் ஆண்டு முதல், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், அவரது வீட்டில் இன்று நடக்கும் மதச்சடங்கு விழாவில் கலந்துகொள்ள அனுமதி கேட்டு, தடா சிறப்பு கோர்ட்டில் தாஸா, மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சானப், மனிதாபிமான அடிப்படையில், இந்த மதச்சடங்கில் ஐந்து மணி நேரத்திற்கு, குடும்பத்தினருடன் கலந்துகொள்ள முஸ்தபா தாஸாவுக்கு அனுமதி வழங்கினார்.இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்தபா தாஸா, போலீஸ் பாதுகாப்புடன், இன்று அவரது வீட்டில் நடக்கும் மதச்சடங்கு விழாவில் கலந்துகொள்கிறார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us