இளம்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை
இளம்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை
இளம்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : ஆக 03, 2011 12:46 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் ஒருவர்
அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ., ரேவதி
விசாரிக்கிறார்.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொட்டரை கிராமத்தை
சேர்ந்தவர் நீலமேகம் மனைவி மணிமேகலை (19).
இவருக்கு திருமணமாகி ஒரு
வருடமாகியும் குழந்தை இல்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணிமேகலை
நேற்று முன்தினம் அரளி விதையை அரைத்து குடித்தார். தகவலறிந்த இவரது
உறவினர்கள் மணிமேகலையை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர்
அரியலூர் கண்மணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிமேகலை
சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து மணிமேகலையின் அம்மா
கொளஞ்சி (46) கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து
விசாரிக்கின்றனர்.திருமணமாகி ஓராண்டே ஆவதால் வரதட்சணை கொடுமையால் மணிமேகலை
தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பெரம்பலூர் ஆர்.டி.ஓ., ரேவதி
விசாரிக்கிறார்.