/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு சீருடைஉண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு சீருடை
உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு சீருடை
உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு சீருடை
உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு சீருடை
ADDED : ஆக 09, 2011 02:43 AM
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கும் விழா நடந்தது.சங்கராபுரம் ஆமினா உண்டு உறைவிட பள்ளியில் நடந்த விழாவிற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் பானுமதி தலைமை தாங்கினார்.
இதயதுல்லா வரவேற்றார். முகமது உசேன் முன்னிலை வகித்தார்.மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சீருடை, போர்வை, ஸ்கூல் பேக் உள்ளிட்டவற்றை மோகன் எம். எல்.ஏ., வழங்கினார்.அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அரசு, ராஜசேகர், பேரவை செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் நாராயணன், குசேலன் கலந்து கொண்டனர்.


