/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வாக்காளர் பட்டியலில் மொத்தமாக பெயர்களை சேர்க்க முயற்சி : மாவட்ட நிர்வாகம் அதிரடி விசாரணைவாக்காளர் பட்டியலில் மொத்தமாக பெயர்களை சேர்க்க முயற்சி : மாவட்ட நிர்வாகம் அதிரடி விசாரணை
வாக்காளர் பட்டியலில் மொத்தமாக பெயர்களை சேர்க்க முயற்சி : மாவட்ட நிர்வாகம் அதிரடி விசாரணை
வாக்காளர் பட்டியலில் மொத்தமாக பெயர்களை சேர்க்க முயற்சி : மாவட்ட நிர்வாகம் அதிரடி விசாரணை
வாக்காளர் பட்டியலில் மொத்தமாக பெயர்களை சேர்க்க முயற்சி : மாவட்ட நிர்வாகம் அதிரடி விசாரணை
காஞ்சிபுரம் : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக வழங்கப்பட்ட, 80 மனுக்களுக்கு எதிராகப் புகார் எழுந்ததால், சம்பந்தப்பட்ட மனுதாரர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' எனக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து விசாரணை நடத்தும்படி, தேர்தல் ஆணையம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட, 80 விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதை நிறுத்தி வைத்தனர். இது குறித்து, செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., செல்லப்பாவிடம் கேட்டபோது, 'என்னிடம் மொத்தமாக யாரும் மனு கொடுக்கவில்லை. ஆனால், வந்த மனுக்களை, தாசில்தாரிடம் விசாரணைக்கு அனுப்பி உள்ளேன்' என்றார். இது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட வருவாய் அலுவலர் சுதர்சன் கூறும்போது,'மொத்தமாக வந்த மனுக்கள் தொடர்பாக, விசாரணை நடத்தி கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளேன். சம்பந்தப்பட்ட 80 மனுதாரர்களின் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.


