/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பேரூராட்சிகளுக்கு பழைய ஓட்டு மெஷின்பேரூராட்சிகளுக்கு பழைய ஓட்டு மெஷின்
பேரூராட்சிகளுக்கு பழைய ஓட்டு மெஷின்
பேரூராட்சிகளுக்கு பழைய ஓட்டு மெஷின்
பேரூராட்சிகளுக்கு பழைய ஓட்டு மெஷின்
ADDED : அக் 11, 2011 01:37 AM
திண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு, நகராட்சிகளில் புதிய
மின்னணு இயந்திரங்களும், பேரூராட்சிகளுக்கு பழையவையும் பயன்படுத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மட்டும்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில்
பயன்படுத்திய புதிய இயந்திரங்கள், நகராட்சி தேர்தலுக்கு தயார் நிலையில்
உள்ளன. பேரூராட்சிகளில், 2006 க்கு முந்தைய, பழைய இயந்திரங்களை பயன்படுத்த,
தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கலெக்டர் அலுவலகத்தில்
இருக்கும் பழைய இயந்திரங்கள் தூசு தட்டப்பட்டு, பேரூராட்சிகளில் பயன்படுத்த
தயாராகி வருகின்றன. புதிய இயந்திரத்தில், முதல் ஓட்டுப்பதிவு நேரம்,
கடைசியாக ஓட்டுப்பதிவான நேரம் பதிவாகியிருக்கும். ஆனால், 2006 க்கு முன்
தயாரிக்கப்பட்டவற்றில் இந்த வசதி இல்லை.


