Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ரூ.20 லட்சம் நில மோசடி: இருவருக்கு வலைவீச்சு

ரூ.20 லட்சம் நில மோசடி: இருவருக்கு வலைவீச்சு

ரூ.20 லட்சம் நில மோசடி: இருவருக்கு வலைவீச்சு

ரூ.20 லட்சம் நில மோசடி: இருவருக்கு வலைவீச்சு

ADDED : செப் 04, 2011 09:37 PM


Google News

திருவள்ளூர் : போலி ஆவணம் தயாரித்து, 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து விற்றதாக, போலீசார், இருவரை தேடி வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் உமாதேவி,67. இவருக்கு திருவள்ளூர் மாவட்டம், கும்மனூர் கிராமத்தில் சர்வே எண் (23 மற்றும் 26/2ஏ)வில் 85 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலத்தை, உமாதேவி, 1989, பிப்ரவரி 23ல், சென்னை விளாங்காடுபாக்கம் பகுதியைச் சேர்ந்த துரைபாபு,74 என்பவரிடம் கிரையம் பெற்று அனுபவித்து வந்தார். இந்நிலத்தை, துரைபாபு போலி ஆவணம் தயாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி,50 என்பவருக்கு, 2004ல், செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில், மீண்டும் பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார். இதுதெரியாத உமாதேவி, நிலத்தை பார்வையிட சென்றபோதுதான், ஏமாற்றப்பட்டது தெரிந்த உமாதேவி, திருவள்ளூர் எஸ்.பி., வனிதாவிடம் புகார் கொடுத்தார். புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நில மோசடி சிறப்புப் பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். போலீசார், தலைமறைவாக உள்ள துரைபாபு மற்றும் முனுசாமி ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us