ADDED : செப் 08, 2011 10:07 PM
பல்லடம் : காங்., செயல்வீரர்கள் கூட்டம், பல்லடத்தில் நடந்தது.
வட்டார
தலைவர் ரவி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் பாலசுப்ரமணியம்
முன்னிலை வகித்தார். கோவை புறநகர் மாவட்ட தலைவர் மனோகரன்
வரவேற்றார்.கூட்டத்தில், 'அத்திக்கடவு இரண்டாவது குடிநீர் திட்டத்தை
உடனடியாக செயல்படுத்த வேண்டும்; போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பல்லடம் -
மங்கலம் ரோட்டை விரிவுபடுத்த வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையை அனைத்து
வசதிகள் கொண்ட, மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். பல்லடம்
வட்டாரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும்; பல்லடத்தில் அரசு கலைக்கல்லூரி
அமைக்க வேண்டும்,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஈரோடு மாவட்ட தலைவர்
பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார பொது செயலாளர் ரத்தினசாமி நன்றி
கூறினார்.


