/உள்ளூர் செய்திகள்/சேலம்/சக ஆசிரியருடன் ஏற்பட்ட தகராறு தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சிசக ஆசிரியருடன் ஏற்பட்ட தகராறு தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
சக ஆசிரியருடன் ஏற்பட்ட தகராறு தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
சக ஆசிரியருடன் ஏற்பட்ட தகராறு தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
சக ஆசிரியருடன் ஏற்பட்ட தகராறு தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
ADDED : ஆக 19, 2011 02:23 AM
இடைப்பாடி: இடைப்பாடி அருகே உடன் பணியாற்றும் ஆசிரியருடன் ஏற்பட்ட
தகராறால், தலைமை ஆசிரியை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸார் மற்றும் கல்வித்துறை
அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இடைப்பாடி தாலுகா, கொங்கணாபுரம்
அருகே உள்ளது தொண்டிபாளையம் நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில், தலைமை
ஆசிரியையாக அன்பரசி உள்ளார். இவருடன், ஆசிரியர் முருகேசன், ஆசிரியை
பரமேஸ்வரி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளி, கடந்த எட்டு
மாதங்களுக்கு முன்பு நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம்
உயர்த்தப்பட்டதால், அரசு சார்பில் வழங்கப்படும் புதிய பள்ளிக்கட்டிடம் கட்ட
அனுமதியை, கிராம கல்விக்குழுவுக்கு வழங்கப்பட்டு, கட்டிட பணியும் நடந்து
வருகிறது.இந்நிலையில், வகுப்பறை கட்டிடம் தரமில்லாமல் கட்டுவதாகவும்,
வகுப்பறைகள் கட்டும் முன்பே, கட்டிடம் கட்டத் தேவையான பணம் முழுவதும்,
கிராமக் கல்விக்குழு உறுப்பினர்கள் எடுத்து விட்டதாகவும், தலைமை ஆசிரியை
அன்பரசிக்கும், கிராம கல்விக்குழு உறுப்பினரும், இடைநிலை உதவி ஆசிரியருமான
முருகேசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக,
தலைமை ஆசிரியை அன்பரசியும், ஆசிரியர் முருகேசனும், தனித்தனியே கல்வித்துறை
அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு அனுப்பியுள்ளனர். இந்நிலையில், தலைமை
ஆசிரியை அன்பரசி, நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆபத்தான நிலையில், இடைப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிரியையின் கணவர், மகுடஞ்சாவடி
போலீஸில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலீஸாரும், கல்வித்துறை
அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


