Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தரமான விதை உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தரமான விதை உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தரமான விதை உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தரமான விதை உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

ADDED : ஜூலை 23, 2011 11:37 PM


Google News

குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண்மைத் துறை சார்பில் தரமான விதை உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி கொத்தவாச்சேரில் நடந்தது.

கடலூர் வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் அப்பன்ராஜ் வரவேற்றார். விதைச்சான்று உதவி இயக்குனர் அரிதாஸ் தரமான விதைகள் உற்பத்தி செய்வது பற்றி பயிற்சி அளித்தார். கடலூர் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி, தரணி காமாட்சி மண் மாதிரி, நீர் மாதிரி மற்றும் பரிசோதனையின் அவசியம் குறித்து விளக்கினார். துணை வேளாண்மை அலுவலர் திருஞானம், உதவி வேளாண்மை அலுவலர்கள் பரஞ்ஜோதி, தனசேகர், சின்னதுரை, சண்முகசுந்தரம் உடனிருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us