தூத்துக்குடி தி.மு.க. செயலர் மீது நில மோசடி புகாரா?
தூத்துக்குடி தி.மு.க. செயலர் மீது நில மோசடி புகாரா?
தூத்துக்குடி தி.மு.க. செயலர் மீது நில மோசடி புகாரா?
ADDED : செப் 05, 2011 03:45 PM
தூத்துக்குடி: நில அபகரிப்பில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்ட தி.மு.க.
செயலர் பெரியசாமி மீது புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலரான பெரியசாமி இன்று காலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் டி.எஸ்.பி. சசிகலா விசாரணை நடத்தினார். இந்த விசாரணைக்கு பின்னர், தூத்துக்குடியில் உள்ள தனக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் ஒருவரை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வந்ததாக பெரியசாமி கூறினார். ஆனால் போலீஸ் தரப்பில் , நில விற்பனை தொடர்பான விவகாரத்தில் பெரியசாமி தலையிட்டதாகவும் அது தொடர்பாக போலீசிடம் நேரில் வந்து விளக்கம் தந்ததாகவும் கூறப்படுகிறது.


